அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு […]
நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர்(37) என்பவர் மாரியப்பனை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் […]