மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிழவன்புதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 48 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு அதிக காரத்துடனும், உண்ணமுடியாத அளவிற்கு இருப்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பளியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர் கவிதா என்பவர்,மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை வீசி எறிவதாகவும், மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். […]

மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை

திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து விட்டதால் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் 7 நாட்கள் கழித்து தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெனட் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.