சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]