“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு
தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் […]