ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி  சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே    விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை  ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், சாலையின் பேருந்து நிறுத்தத்தில் நின்று […]