தென்கிழக்கு வங்கக்கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், பிப்.14லும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை

இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று முன் தினம் மாலை 17.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.இது நேற்று (06-01-2026) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (07-01-2026), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு […]

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக் கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது 30 முதல் 70 கிலோ மீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தெடந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்படை விட 6% குறைவாக […]