வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து வருதல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் […]