ஜன.7ம் தேதி வரை அதிகாலை தமிழகத்தில் பனிமூட்டம்

தமிழ்நாட்டில் ஜனவரி .7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜன.5 முதல் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தது.

தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.மேலும் இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 C இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

23ம் தேதி வரை தமிழகத்தில் கடும் குளிர் நீடிக்கும்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழகம் ஊடாக காற்று பயணிக்கிறது. அதனால் தமிழக மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். நீராவிக் காற்றைவிட குளிர் […]