வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு
கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி, தற்போது வால்பாறை பகுதியில் ஈரப்பதம் பொதுவாக 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக ஈரப்பதம் குறைவாக காணப்படும் காலமாக இருப்பதால், நிலம் விரைவாக உலரும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு […]
வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் வெளியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், வெளியே கிடந்த அந்த உடலை மீட்டு மீண்டும் அதே இடத்தில் நல்லடக்கம் செய்தனர். […]
சிறுத்தை தாக்கி குழந்தை பலி
கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் வனத்துறை என தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்தது. இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக […]