கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில் ஆய்வு செய்தனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. […]