“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!
சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு இந்தியாவைத் தீவிரமாக ‘இந்தி மயமாக்’குவதில் குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கையை முன்னிறுத்தி மோடி அரசு செயல்படுவது […]