யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அனில்கிஷோர், தான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்கே சென்று […]
புதுக்கோட்டை அதிமுக பிரமுகர் விபத்தில் பலி
புதுக்கோட்டை மாவட்டம் அ.திமுக பொருளாளரும், மாவட்ட அ.திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவருமான வாண்டா கோட்டை வி.சி.ராமையா இன்று காலை வீட்டின் அருகே நடந்த விபத்தில் உயிருக்கு போராடிய அவரை புதுக்கோட்டை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.