ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]

யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் […]

ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததை அடுத்து 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.

”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

 விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தற்போது வரை சென்சார் சான்று தரப்படவில்லை. தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சிபிஐ விசாரணையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, போனில் அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் […]

அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட […]

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் டிசம்பர் 29-ஆம் […]

திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய உரிமையை அமைதியாக வலியுறுத்தினர்.போராட்டக்காரர்கள், “நூற்றாண்டுகளாக மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூண் என்று கூறுவதற்கு […]

திருப்பரங்குன்றம் விவகாரம்- இரு நீதிபதிகள் அமர்வில் அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதங்களை முன்வைத்தார். “மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும்; அரசு […]