கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்
கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வால்வு பகுதியிலிருந்து குடிநீர் கட்டுப்பாடின்றி வெளியேறி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் சாலையில் […]