வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் வெளியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், வெளியே கிடந்த அந்த உடலை மீட்டு மீண்டும் அதே இடத்தில் நல்லடக்கம் செய்தனர். […]