வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்
சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]
வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து
வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் […]
77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற அஜித்குமார், மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அஜித்குமார், போதையில் அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் அங்கிருந்து […]
வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்
வேலூர் மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய தனியார் காட்டில், 3 யானைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைகளின் மரணத்திற்கான காரணம் குறித்து அறிய உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகம்: மர்மமான முறையில் யானைகள் இறந்தது குறித்து வனவிலங்குப் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வனத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்ற 3 மகன்கள் இருந்தனர். இதில், மூத்த மகன் விகாஷிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜீவா தந்தைக்கு உதவியாக ஊரிலேயே நர்சரி வைத்து பார்த்து வந்துள்ளார். இந்த […]
கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கழிவு நீர் […]
6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ( ஜூன் 9-ந் தேதி) வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது சரவணனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவரை உறவினர்கள் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சரவணன் […]
8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை 8ம் வகுப்பு மாணவன் எடுத்து பார்த்துள்ளார். குறுஞ்செய்தியில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து 70 ஆயிரம் டாலர் வந்துள்ளது. இதற்கான சுங்கக்கட்டணமாக ரூ.45 ஆயிரம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த மாணவன் தனது அக்கா வங்கி எண்ணிலிருந்து […]
போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை- வேலூரில் பரிதாபம்
வேலூரை சேர்ந்தவர் வேல்முருகன் (39 ). இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ் (11 ), சாத்விக் (8 ) என 2 மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் வேல்முருகன் கஸ்பாவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.. விபத்து ஏற்பட்டதில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமலும், இதனால் […]