ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல் பத்து உற்சவம் 20-ம் தேதி தொடங்கியது. இவ்விழா நாட்களில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கடந்த டிசம்பர் 29-ம் தேதி மோகினி அலங்காரத்தில் […]
ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த […]