ஆட்சியில் பங்கு…ஒத்துவராது… நெல்லையில் வைகோ

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, “திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் ஸ்டாலின் தொடர்வார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என […]

எடப்பாடிக்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறி” – வைகோ

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சூரியன் எப்போதும் மறையாது என்றும், திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் […]

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ: விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியில், திருச்சி […]

வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து […]