புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வௌியீடு… டிஎன்பிஎஸ்சி

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறைத்து அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு 5% குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50% அல்லது 75 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேர்வு எழுதியவர்களுக்கும், மேலும் ஆசிரியர்களாகத் தொடர்வதற்குத் தகுதித் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது.

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து, 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் கொண்டாடும் வகையில், […]