ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட் (187 பைகள்), 9 பெட்டி டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டி ஃப்யூஸ் வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]