11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் இருக்கும்
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்த்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 11ம் தேதி 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஜனவரி 11ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் […]