ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” […]
சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.