தமிழகத்தில் டிசம்பர் 19-ல் வரைவு பட்டியல் வெளியீடு- 13 லட்சம் பெயர்கள் நீக்கம்?
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிர நடவடிக்கையின் நோக்கம், குளறுபடிகள் இல்லாத ஒரு தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சரிபார்ப்புப் பணிகளில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் […]