16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை
ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததுடன், விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய […]