17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மெய்யப்பன் அந்த மாணவியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, […]