ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம்
ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கரூரில் நடைபெற்றதமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு கரூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் செயல் அறிக்கை வாசித்தார். மேலும் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து […]