அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சமையலர் பாப்பாள் மீது சாதிய ரீதியில் தாக்குதலும் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் […]
லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…
திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில் செய்ய ரூ.700ஐ லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மணிகண்டன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷிடம் புகார் செய்துள்ளார். வினாயகவேலை பிரசன்னவெங்கடேஷ் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]