மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று 16 பேரின் உடல்கள மீட்டனர். இந்நிலையில், மீட்புப்பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இதில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலக்கரி […]
இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இதில் வீடுகளில் இருந்த 97 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், கடந்த இரண்டு நாட்களாகப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், […]
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. […]