காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனியாக வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, திருமணமான நாள் முதலே நகை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு […]