மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த சில நாட்களுக்குமுன் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.இந்நிலையில், மணிப்பூரில் இன்று 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் […]
திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில் குட்டி மலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி மது பெற்ற கிராபட்டியை சேர்ந்த வேளாங் கன்னி (40) எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( 42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது
சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்த கும்பல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு சுமார் 35-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு வந்தவர்களிடம், “25 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ் முறையில் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது […]
பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழக்கரை வனஉயிரின சரக அலுவலர் கௌசிகா தலைமையில் வனவர் காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழக்கரை அப்பாத்தீவு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு படகில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் […]
தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது
தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் வழக்கம்போல் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளார். இதை நோட்டமிட்டு 2 மோட்டார் சைக்கிளில் வெளியில் காத்திருந்த மாணவர்கள் சிலர் பள்ளி […]
போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கூத்தாநல்லூர் வெள்ளக்குடி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரதீபன் (23) வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை அடகுகடை பங்குதாரர் ரமேஷ் தனது தம்பி அர்ஜுன் மற்றும் பிரதீபன் ஆகியோரை காரில் […]
கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 4 பேர் கைது
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் காளப்பட்டி சாலையில் சென்ற போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிஜய் […]