புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்தும் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் […]