கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு
கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரெனத் தீப்பிடித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனக் குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சியளித்ததால், வாகன […]