திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் நட்புடன் பழகி குழந்தைக்கு தடுப்பூசிசெலுத்தி விட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி […]