நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்
மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு நின்றபோது, வந்த ராட்சத அலையின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. […]