ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் போராட்டக்காரர்கள், சில இடங்களில் அரசு கட்டிடங்களுக்குத் […]