ஒரு வயது குழந்தை கடத்தி விற்பனை… 6 பேர் கைது..

திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெயஸ்ரீ காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தனது குடிசை அருகே தங்கியிருந்த வேலூர் தம்பதியையும் காணவில்லை என்பதால் சுசித்ராவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி என்பவர் வைத்திருந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட சோனியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதனை அதிக விலைக்கு விற்கத் […]