திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக் கைதுசெய்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ எனும் பால்பண்ணை மூலமாக அந்தப் போலி நெய் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிப்பதற்குத் தேவையான நெய்யை அனுப்பி […]