தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு
வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட […]