புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு […]
SIR பணியை பொறுத்தவரை பாதி கிணறு தாண்டியுள்ளோம்- முதல்வர்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய நோக்கமே “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டத்தை […]
SIR பணி முழுமை அடையவில்லை எனில் ரத்து செய்யனும்-அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஒரே அறையில் அமர்ந்து 22,000 வாக்காளர்களை நீக்கியுள்ளனர். பிஎல்ஓ-க்கள் வாக்காளரை சரிபார்க்க வீடு வீடாகச் செல்லாமல் ஒரே அறையில் அமர்ந்தே நீக்கிவிட்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கூறுவது தவறு, எந்த ஊரிலும் ஆய்வு செய்யவில்லை என தெரிவித்தார்.
SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு
திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் SIR படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல் லாமல் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அதற்கு உடந்தைகயாக செயல்படும் BLO-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி […]
SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், திருமயம் வட்டாட்சியர் ப.வரதராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.