மது போதையில் தகராறு: முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொலை – 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே உள்ள தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு, சரிதா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று, இளங்கோவன் வீரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24) மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து பட்டயான்கலம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் […]

மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (53) கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நாகராஜ் தனது மகள்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 27-ந் தேதி நாகராஜின் மகள்வழி பேத்தியின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதனால் நாகராஜ் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களுக்கு மது […]