மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்
சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட […]