புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன் மாவட்ட மைய மூன்றாம்நிலை நூலகர் எஸ். கண்ணன் வழங்கினார். உடன் மூன்றாம் நிலை நூலகர் குமுதா,எஸ் ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி மோசடி- 17 ஆண்டு சிறை

ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர் அறக்கட்டளை தலைவர், ஐபிஎஸ் அதிகாரி, அரசியல்வாதி என பல வேடங்களில் மக்களை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி என பெண் காவலரை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், […]

கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி கடந்த 19ஆம் தேதி முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதியில் வசித்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் […]