பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அரசின் இலச்சினை (Logo) அல்லது தங்களது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் […]

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை […]

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், […]

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ம.செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தநல்லூர் வட்டார செயலாளர் ஔவைமணிமொழியாள் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் […]