தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால், சிகிச்சைக்காக தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தைக்கு சிகிச்சை முடிந்து, இன்று வீடு திரும்புவதற்கான டிஸ்சார்ஜ் (Discharge) நடைமுறைகளுக்காக சரண்யா காத்திருந்தார். வார்டில் உள்ள படுக்கையில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல்புறக் கூரையின் சிமெண்ட் காரை […]

அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2 மாணவர்களும் சேலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.