மின்மாற்றியில் மோதிய அரசு பஸ்.. அரியலூரில் பரபரப்பு
அரியலூர் மாவட்டம், அரியலூரிலிருந்து சுத்தமல்லி, ஆலம்பள்ளம், காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பஸ் இன்று காலை அரியலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. ஆலம்பல்லம், காசாங்கோட்டை கிராமங்களுக்கு இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்துக்கு வழி விடுவதற்காக அரசு பஸ்சை ஓட்டுநர் ராஜ்குமார், சாலையின் இடது ஓரம் வரை பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியில் பேருந்து மோதியுள்ளது. இதனால் […]