ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, தமிழக […]
எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து
எதிர்கட்சி தலைவரா ஆளுநர்?தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார். மகா மகா வெட்கக் கேடு! ‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ […]
மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்தூர்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசிக்கிறது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் […]