இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இதில் வீடுகளில் இருந்த 97 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், கடந்த இரண்டு நாட்களாகப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், […]
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்
இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா லஹ்பா, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் செயலிகளில் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல யூடியூபர் மற்றும் இசைக்கலைஞரான ரெசா ஒக்டோவியன் என்பவரைக் காதலித்து […]