துணை முதல்வர் உதயநிதி புதுகை வருகை-உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலைபுதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை சிப்காட் அருகில் வரவேற்றனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, திமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், பொன்துரை,தலைமை க்கழகபேச்சாளர் மதியழகன், மற்றும்மு.க.ராமகிருஷ்ணன்,மாலாராஜேந்திரதுரை, கே.எஸ்.சந்திரன், அசோக் பாண்டியன்,கோமாபுரம்சந்திரசேகரன், எம்.எம்.பாலு, வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 மாதத்தில் ரூ. 9000- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய தொகை வழங்கலை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். “மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயன்றவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, முதலமைச்சர் ஒரே நேரத்தில் ரூ.5,000-ஐ மகளிரிடம் சேர்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “போன மாதம் மகளிர் […]
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!. கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்@mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி […]
இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:- தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய […]
125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 125 மின்சார பேருந்துகளும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 125 பேருந்துகளில் 45 பேருந்துகள் முழுமையான ஏசி வசதி கொண்டவை. மீதமுள்ள 80 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத தாழ்தளப் பேருந்துகளாகும். முதியவர்கள், […]