நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு

திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் – ரூபியாபானு என்ற தம்பதியின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன், கல்பாக்கத்தில் செயல்படும் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே இச்சிறுவன் நினைவாற்றல் மற்றும் விரைவாகப் பதிலளிக்கும் வேகம் கொண்டவனாக திகழ்ந்து வருகிறான். […]

கோவையில் பிரமிப்பு: 11 மணி நேரத்தில் உருவான நவீன கட்டிடம் – கட்டுமான நிறுவனம் உலக சாதனை

கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம், 24 மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிட்ட நேரத்தை விட மிக விரைவாக, அதாவது 11 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 1,000 சதுரடி பரப்பளவில் அழகான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். முற்றிலும் உலோகங்கள் மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடனடி கட்டிடத்தை ஒரு […]