குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் சாலைகள், சிக்னல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை கையேந்த வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பல ஆண்டுகளாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குழந்தை உரிமைகள் மீறலாகவும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகவும் கருதப்படுவதால், இதுதொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது ஒரு மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக […]